குஜராத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பி.ஜே. மருத்துவ கல்லூரியின் விடுதியில் விழுந்த இந்த கோர விபத்தில், 200க்கும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு டாடா குழும தலைவர் சந்திரசேகர் இரங்கல் தெரிவித்து இருந்தார். பாதிக்கப்பட்ட பயணிகள் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பதை முதன்மை நோக்கம் என்றும் தகவல்களைத் தேடும் குடும்பங்களுக்கு ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத்தில் பயணிகள் விமானம் நொறுங்கிய கோரச் சம்பவம்...242 பேரின் கதி என்ன?

இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும், விமானம் விழுந்து நொறுங்கியதால் சேதம் அடைந்து பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி புதிதாக கட்டித் தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பந்தம் விட்டுப் போகுமா? பிரதமர் மோடிக்கு குஜராத் மக்கள் உற்சாக வரவேற்பு..!