தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். 77,400 கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புள்ள திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் குஜராத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், வதோதராவில் ரோடு ஷோ நடத்திய பிரதமருக்கு சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: கையைப் பிடித்த மோடி; நெகிழ்ந்து போன ஸ்டாலின்... 10 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து முதன்முறையாக பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு தேசிய கொடிகளை காண்பித்தும் பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓகே சொன்ன பிரதமர் மோடி.. முதல்வர் ஸ்டாலினை எப்போது சந்திக்கிறார் தெரியுமா?