அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானம் புறப்பட்ட அடுத்த நிமிடமே மே டே கால் எனும் அவசர அழைப்பு வந்தது.

அழைப்பு வந்த ஒரு சில வினாடிகளிலேயே அழைப்புத் துண்டிக்கப்பட்டு விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர், ஒரு கனடா நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டவர் என சொல்லப்படுகிறது. குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்ததால் அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: குஜராத் விமான விபத்து... இதயம் உடைந்தது; தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ராகுல்!!

இதில் விடுதி அறையில் தங்கியிருந்த 25 மாணவர்கள் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்துள்ளார். இதையடுத்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். விமான விபத்தில் விமானத்தில் 11 ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஷ் குமார் என்ற பயணி உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது. அகமதாபாத் விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது சமூகவலைதள பக்கத்தில் முகப்பு பக்கத்தை கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு...டாடா நிறுவனம் அறிவிப்பு!