இளம் தலைமுறையின் இன்ஸ்டாகிராம் காதல் மோகம் என்பது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு முக்கியமான சமூகப் பண்பாட்டு நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இன்ஸ்டாகிராம், ஒரு சமூக ஊடக தளமாக, புகைப்படங்கள் மற்றும் குறு வீடியோக்கள் மூலம் தனிநபர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மேடையாக மட்டுமல்லாமல், காதல் உறவுகளின் தொடக்கம், வளர்ச்சி மற்றும் வெளிப்பாட்டிற்கு ஒரு முக்கிய களமாகவும் மாறியுள்ளது. இளைஞர்கள் இந்த தளத்தை தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உறவுகளைப் பராமரிக்கவும், புதிய உறவுகளை உருவாக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இதன் பின்னணியில் சமூக, உளவியல் மற்றும் தொழில்நுட்ப காரணிகள் இணைந்து செயல்படுகின்றன.இன்ஸ்டாகிராமின் கவர்ச்சி முதலில் அதன் காட்சி ஊடக அம்சத்தில் உள்ளது. இளம் தலைமுறையினர் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகள் மூலம் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை அழகாக வெளிப்படுத்த விரும்புகின்றனர்.

இன்ஸ்டாகிராம் காதல் மோகத்தால் பலர் ஏமாறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆந்திராவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் instagram- ல் ஒரு பெண்ணுடன் பழகிய நிலையில் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் I LOVE YOU என மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு 15 வயது சிறுவனும் ஐ LOVE YOU TOO என ரிப்ளை அனுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து மறுநாள் அந்த சிறுவனின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
இதையும் படிங்க: Insta காதல் மோகம்... ரயிலில் பறந்த மாணவி! நகை உள்ளிட்டவற்றை அபேஸ் செய்த பலே கில்லாடி இளைஞன்
INSTAGRAMல் பழகும் பெண்ணிற்கு ஐ லவ் யூ சொல்லுவீர்களா என்றும் அவரது கணவன் தனக்கு போன் செய்து கூறியதாகவும் மிரட்டி உள்ளார் ஒரு மர்ம நபர். இதனால் செய்வதறியாது பதறிப்போன சிறுவன் அழுது கொண்டே என்ன சொன்னாலும் செய்வதாக அடிபணிந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுவனிடம் இருந்து 11 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்று அந்த கும்பல் மோசடி செய்துள்ளது. நாளுக்கு நாள் வினோதமான முறைகளில் பணப்பரிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: Be Cool செங்கோட்டையன்... பாத்துக்கலாம்! சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக