அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அண்ணாமலை குற்றவாளி ஞானசேகருக்கு அந்த பகுதியில் வசித்து வரும் கோட்டூர் சண்முகத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பிஆர்ஓவாக இருந்த நடராஜனுக்கு நெருங்கிய நண்பன் என்றும் கூறியிருந்தார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்துடன் பேசியதாகவும், அந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் அண்ணாமலை பேசியிருந்தார். தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டதன் பிறகு தன்னை குறித்து இந்த பொய்யான குற்றச்சாட்டை கூறி தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தனக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்டத்தை வழங்க வேண்டும் என்று நடராஜன் வழக்கறிஞர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கோட்டூர் சண்முகம் என்பவர் தன்னுடைய நீண்ட கால குடும்ப நண்பர் எனவும், அவரும் தான் தொலைபேசியில் பேசியதை வைத்து, தன்னை இந்த கூட்டம் தொடர்புபடுத்தி பேசியதால், அண்ணாமலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அண்ணாமலைக்கு அமித்ஷா ஸ்ட்ரிக்ட் வார்னிங்..!
இதையும் படிங்க: திமுகவை விரட்டுவதே ஒற்றை இலக்கு..! அண்ணாமலை அனல் தெறிக்கும் பேச்சு..!