தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. அண்ணாமலை தனது ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில் மற்றும் தனது அறிக்கையில், தமிழகத்துக்கான அரசியல் அணுகுமுறை குறித்து கட்சியின் மூத்த தலைமையுடன் தனக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களாக இந்த முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும், தமிழகத்தில் சுயேச்சையான வளர்ச்சியை வலியுறுத்திய அவர், கூட்டணி அரசியலால் கட்சி பின்னடைவை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக, AIADMK உடனான கூட்டணி உத்தி கட்சியின் வாக்கு சதவீதத்தை கணிசமாகக் குறைத்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது பாஜக 11.38% வாக்குகளைப் பெற்ற நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் 3%க்கு கீழ் விழுந்தது என்பது அவரது முக்கிய வாதம்.
இதையும் படிங்க: #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!
இந்த நிலையில் தான் புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அவர் அறிவித்தார். அதுமட்டுமில்லாத தன்னுடைய பாஜகவின் பயணத்தையும் விவரித்தார். WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். www.wetheleader.org என்ற இணையதளத்தின் வாயிலாக தங்கள் இயக்கத்தில் இணையலாம் என்று அறிவித்திருக்கிறார். தற்போது 80 ஆயிரத்தை கடந்து உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா ஏற்பு! பாஜக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உறுதியானது தனிக்கட்சி