தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு விவாதமாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் எம். அப்பாவு கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு தலைமுறை இளைஞர்களையே போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” என்று முதலமைச்சர் விஜய்யை நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பாவு, தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமாவார். இராதாபுரம் தொகுதியிலிருந்து பல முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது அரசியல் பயணம் நீண்டகால அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் தலைமையிலான அரசுக்கு எதிராக அவர் அடிக்கடி கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

“தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரிக்க முன்னாள் ஆட்சியாளர்கள் தான் காரணம் என மறைமுகமாகப் பழி போடும் முதலமைச்சர் விஜய் அவர்களே! தாங்கள் நடித்த திரைப்படங்கள் மூலம் ஒரு தலைமுறை இளைஞர்களையே போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்கள் தானே என்று முதல்வர் விஜய் குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!
விஜய்யின் சினிமா படங்களில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இடம்பெற்ற போதை தொடர்பான காட்சிகள், உரையாடல்களை சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு, குறிப்பாக கஞ்சா உள்ளிட்டவை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அப்பாவு வெற்றி..! சுப்ரீம் கோர்ட் பேச்சை மீறிய ஹைகோர்ட்..!! இன்பதுரை மேல்முறையீடு..!!