முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வெற்றி விழாவுக்காக ரசிகர்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அசம்பாவிதம் ஏற்பட்ட நிலையில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி 10 நிமிடங்களில் முடிந்தது என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானம் அருகே உள்ள ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. எதற்கும் கட்டுப்படாமல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரசிகர்கள் கூச்சலிட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் திரளும் கூட்டத்தால் பெங்களூரு திணறியது. மற்றொருபுறம் கூட்டம் வெளியேற முடியாத நிலையில் நுழைவு வாயில் பகுதியில் ரசிகர்கள் தவித்தனர்.
இதையும் படிங்க: RCB வெற்றி விழாவில் நிகழ்ந்த சோகம்... கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் உயிரிழப்பு!

கிரிக்கெட் மீது ரசிகர்கள் பித்து பிடித்தது போல பற்று வைத்திருப்பதன் விளைவு இது என்றும் பிரபலமான விஷயங்களின் எதிர்மறையான அம்சம் இது என பிசிசியை கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று இரவு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதையும் படிங்க: "ஈ சாலா கப் நம்தூ"... RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!