அகமதாபாத்தில் நடந்த 18வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு அணிக்கு வாழ்த்துகளை கூறி உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஐபிஎல் வெற்றிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் கனவு இறுதியாக நனவாகியுள்ளது எனவும் ஈ சாலா கப் நம்தே! என்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

அற்புதமான ஆட்டங்களிலிருந்து அசைக்க முடியாத உற்சாகம் வரை, இந்த வெற்றி கர்நாடகாவின் பெருமையைத் தூண்டியுள்ளது மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக இந்த நாளுக்காக காத்திருந்தோம்... RCB ஜெர்சியுடன் டிகே சிவக்குமார் வீடியோ!!