கேரள மாநிலம், நிலம்பூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த அன்வர், ராஜினாமா செய்த நிலையில் அங்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனிடையே தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கேரளாவில் நடைபெற்ற நிலம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்யாடன் சவுகத் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்வராஜை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் 8,562 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இத்தேர்தலில் மொத்தம் 1,54,159 வாக்குகள் பதிவாகின, 73.12% வாக்குப்பதிவு சதவீதத்துடன். பாஜக வேட்பாளர் 8,562 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
இதையும் படிங்க: ஜூன் 19ல் இடைத்தேர்தல்.. தொகுதிகளை பட்டியலிட்டு வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!
இதே போல் லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விசாதார் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான இத்தாலியா கோபால் 75,942 வாக்குகளுடன் வெற்றியை கைப்பற்றியுள்ளார். மேலும், குஜராத் மாநிலம் காடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர குமார் 99,742 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
