காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!
இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கியது இந்தியா. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவிற்குள் ஒளிந்து கொண்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் லோக்கல் பயங்கரவாதிகள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

எனினும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது நீண்ட காலமாக தொடர்கிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான் மறுத்தது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், வழக்கம்போல பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இது போன்ற சர்ச்சையின் போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் உண்மையை உளறி கொட்டுவார்.
எதிர்பார்த்தது போலவே அந்நாட்டு ஊடகம் ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி தரும் மோசமான வேலையை அமெரிக்காவுக்காக 30 ஆண்டுகளாக செய்தோம். பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்காகவும் செய்தோம். ஆனால், இது பெரிய தவறு.

இதனால், பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என கூறி இருந்தார். அந்த வகையில் இப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா உதவியது என கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் சீனா உளவு தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு தெரிவித்தனர். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை சீனா வழங்கியது. இது பெரிய அளவில் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததால் இந்தியாவை எதிர்கொண்டோம் என குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., சதி! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கெத்து காட்டிய ராஜ்நாத் சிங்..!