பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை புகட்டியது. அதனைத் தொடர்ந்து நமது எம்பிக்கள் குழு பல நாடுகள் சென்று சிந்தூர் ஆபரேஷன் குறித்து விவரித்தது. இந்திய ராணுவ திறமையை உலகம் முழுவதிலும் பறைசாற்றினர். இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு இந்திய போலீசார் சிலர் உளவு பார்த்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது
அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களை கண்டறிந்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் போலீசின் புலனாய்வுப் பிரிவு நேற்று டில்லி கடற்படை தலைமையகத்தில் சிஐடி உயர் பிரிவு எழுத்தர் (UDC) விஷால் யாதவ்வை 1923ம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

ஹரியானாவைச் சேர்ந்த யாதவ் பாகிஸ்தான் உளவுத்துறையை கையாளுபவருக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டுள்ளார். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி விஷ்ணுகாந்த் குப்தா கூறுகையில், பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த பிரியா ஷர்மா என்று கூறிக் கொள்ளும் பெண்ணுடன் விஷால் யாதவ் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை பகிர்வதற்கு சன்மானமாக, அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., சதி! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கெத்து காட்டிய ராஜ்நாத் சிங்..!
ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையான விஷால் யாதவ், அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. வர்த்தக கணக்கு மூலம் கிரிப்டோ கரன்சியாக பணத்தை பெற்று வந்துள்ளார். இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றார். மேலும் விஷால் யாதவ், சிந்தூர் உட்பட கடந்த கால பாதுகாப்பு கசிவுகளில் அவரது தொலைபேசி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடற்படை நடவடிக்கைகளில் இருந்து முக்கியமான மூலோபாய தகவல்களைப் பெற்றுத் தருவதற்காக பணம் கேட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அரட்டை பதிவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட மோசமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் யாதவ், ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் போது முக்கியமான கடற்படை உளவுத்துறையை கசியவிட்டார் என்பதைக் காட்டுகிறது
மேலும் நீண்ட காலமாக அவர் உளவு பார்த்ததையும் குறிக்கிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் யாதவ் பல புலனாய்வு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

யாதவுடன் வேறு யார்? யார்? தொடர்பில் இருந்தனர், பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு ஒரு அறிவுறுத்தலை NIA அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் சமூக ஊடகங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது தொடர்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாகப் புகாரளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா - பாக்., ஈரான் - இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..