அரசியல் கட்சிகள் மற்றும் தற்போதைய சமூக வலைதள விவாதங்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டுத் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தவோ, எதிர்வினையாற்றவோ வேண்டாம்" என்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) மேதகு சூர்யகாந்த் அவர்கள் இன்று டார்மீக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, சமீபகாலமாகச் சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகளை விமரிசித்து நீதிமன்ற வளாகத்திற்குள் எழும் விவாதங்கள் குறித்துத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, "சட்டத்தின் மாண்பைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் வழக்கறிஞர்கள், பொதுவெளியில் வெளியாகும் அரசியல் ரீதியிலான விமரிசனங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்டு உணர்ச்சிவசப்படக் கூடாது. அரசியல் களம் மற்றும் ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் உலா வருவது இயல்பானதே. அதற்காகச் சட்ட வல்லுநர்கள் தங்களது நிதானத்தை இழந்து எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை" என்று குறிப்பிட்டார்.

மேலும், நீதிமன்ற நடைமுறைகளும், வழக்கறிஞர்களின் தார்மீகச் செயல்பாடுகளும் எப்போதும் அரசியல் சார்பற்றவையாகவும், சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவையாகவும் மட்டுமே இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எந்தவொரு அரசியல் விமரிசனங்களும், நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளையோ அல்லது வழக்கறிஞர்களின் கடமைகளையோ எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது. எனவே, வழக்கறிஞர்கள் அனைவரும் தார்மீகக் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 15 ஆண்டுகால விவகாரம்! கொளத்தூர் தேர்தல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்!
தலைமை நீதிபதியின் இந்தத் தார்மீக வேண்டுகோள், நீதிமன்ற வளாகத்திற்குள் தேவையற்ற அரசியல் விவாதங்களைத் தவிர்ப்பதற்கும், சட்டப் பணிகளில் முழு கவனத்தைச் செலுத்துவதற்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு முக்கிய வழிகாட்டுதலாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!