அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த 12ம் தேதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த விடுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்தவர்களும் பலியாகினர்.

மொத்தம் இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

இதுதொடர்பான உத்தரவில், விபத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ச்சியான விதிமீறல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரிமம், பணியாளர்களின் ஓய்வு தொடர்பான விதிகள் உள்பட சிஸ்டமெட்டிக் பெயிலியர்ஸ் என பல்வேறு வகைகளில் விதி மீறப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு புறம்பாக பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியது தெரியவந்தது. இதனால் டிவிஷனல் துணை தலைவர் சோரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவின் தலைமை மேலாளர் பிங்கி மிட்டல், பணி ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!