தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026இன் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுவதும் வரலாற்று சாதனையாக 85.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் தேர்தல் பார்வையாளர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மே 2ஆம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். அவர்களின் வருகையுடன் வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்தத் தேர்தலில் சுமார் 8.15 லட்சம் பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். இந்த செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!
EVMக்கள் மற்றும் VVPATக்கள் இரட்டை அடுக்கு பாதுகாப்புடன் காப்பறைகளில் வைக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் தினசரி இருமுறை தொகுதி தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு..! காங்கிரஸ் மீண்டும் கலககுரல்..! திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்..!