தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது முதலே தேர்தலுக்கு ஆயுத்தமாகி வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உள்ளது.

டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தையில் உள்ளன. மறுபுறம் தவெக மற்றும் சீமான் கூட்டணி பற்றி இன்னும் எதுவும் தகவல் தெரிவிக்காமல் உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 பொதுத்தேர்வு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ!!

2019ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டிவருகிறது. அதன்படி, 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தலில் போட்டியிடாதது குறித்து உரிய விளக்கத்தை சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் பதிலளிக்காத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அப்பாடா! ஓய்ந்தது பதற்றம்...இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்... ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!