தங்க நகை கடனில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு நிதி அமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிற்கு நிதி அமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பெறப்பட்ட கருத்துக்களை ஆர்பிஐ மதிப்பாய்வு செய்து வருகிறது.

சமீபத்தில் தங்க நகைகளை அடகு வைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் நிதிசேவை அல்லாத வங்கி நிறுவனங்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. ஆர்பி-ஐ கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனைகள் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் எனக்கூறி பல அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. அதாவது அந்த வரைவு இது வந்து இறுதி செய்யப்பட்ட விதிமுறையாக இல்லை என்றாலும் கூட அது வரைவு விதிமுறையாக இருந்தாலும் அதுல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கு.

குறிப்பாக அடகு வைக்கக்கூடிய நகைகளில் 75 சதவீதம் வரை மட்டுமே நகையுடைய மதிப்பில் இருந்து கடன் வழங்க வேண்டும். அதே மாதிரி நகையை அடகு வைப்பவர்கள், அது தங்களுடைய நகை தான் என்பதை உறுதி செய்வதற்கான ஆவணங்களை கொடுக்கணும்னு பல விதிமுறைகள் அந்த ரிசர்வ் வங்கியின் உடையது சொல்லப்பட்டிருக்கு. இதுக்கு பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஒரு எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில் தான் இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடைய அறிவுறுத்தலின் பெயரில் நிதி சேவைகள் துறை இந்த விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இதையும் படிங்க: RBI ரூல்ஸ்லாம் இங்கே எடுப்படாது... அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!!
ஆய்வுக்கு பின்னர் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறு தங்க நகை கடன் வாங்குபவர்களின் தேவைகள் மோசமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பல பரிந்துறைகளை ரிசர்வ் வங்கிக்கு வழங்கி இருக்கிறது. குறிப்பாக இதனை செயல்படுத்துவதற்கு நேரம் தேவைப்படும், அதாவது இந்த புதிய விதிகளை செயல்படுத்த வேண்டும் என்றால் அதனை கள அளவில் செயல்படுத்துவதற்கு நேரம் தேவைப்படும் என்பதால் ஜனவரி 1 2026 வரை செயல்படுத்தலாம் எனக்கோரப்பட்டுள்ளது.

மேலும் சிறிய அளவில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு சரியான நேரத்தில் விரைவாக கடன் வழங்குவதை உறுதி செய்வதற்காக, இரண்டு லட்சத்திற்கும் குறைவான சிறிய கடன் வாங்குபவர்கள் புதிய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற கோரிக்கையையும் நிதி அமைச்சகம் முன்வைத்துள்ளது.
மேலும் இந்த வரைவு வழிகாட்டுதல் குறித்து பெறப்பட்ட கருத்துக்களை ரிசர்வ் வங்கி முழுமையாக மதிப்பாய்வு செய்யும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பல்வேறு பங்குதாரர்கள் எழுப்பிய கவலைகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் குறித்த வழிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்பு ஆர்பிஐ முறையாக பரிசீலிக்கும் என நம்புவதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தங்களது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய நகைக்கடன் நெறிமுறைகள் விவசாயிகளை வஞ்சிக்கும்! நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்...