வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகைக்கடன் பெறவே முடியாது என்ற சூழலை இந்த புதிய விதிகள் உருவாக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நகை கடன் வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறுகிய கால பயிர் கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குவது நகை கடன் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மலிவு அரசியல் தவிடுபொடியானது! அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்...

விவசாயிகள் பயிர் கடன் வாங்க தங்க நகைகளை ஈடாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில் ஆர்பிஐ நெறிமுறைகள் உள்ளதாகவும், ஆர்பிஐ நெறிமுறைகள் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல கடன் விநியோக முறைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் உயிர் உங்களுக்கு அவ்ளோ அலட்சியமா? நீங்க பொறுப்பேத்துப்பீங்களா? முதலமைச்சரை லெஃப்ட் & ரைட் வாங்கும் நயினார்..