ஒடிசா மாநிலம் சாந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் (ITR) இருந்து 'அக்னி-4' இடைநிலை வீச்சு பாலிஸ்டிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதக் கட்டளையகத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையானது, ஏவுகணையின் அனைத்துச் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளையும் துல்லியமாக பூர்த்தி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'போதை சில நிமிட மகிழ்ச்சி தரும்... ஆனால் வாழ்க்கையையே அழித்துவிடும்' - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அக்னி-4 ஏவுகணை, இந்தியாவின் தற்காப்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
முன்னதாக நடப்பாண்டிலேயே அக்னி-பிரைம் மற்றும் அக்னி-3 ஆகிய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகளும் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது அக்னி-4 ஏவுகணையும் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மற்றொரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றும் ஷேக் ஹசீனா! வங்கதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு!