உலகம் முழுவதும் பேசப்பட்டு வருவது அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்புதான். இது தொடர்பாக 12 நாடுகளுக்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுருக்கிறார். இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால் பதில்வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுருக்கிறது. இதை ட்ரம்ப் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி 20ஆம் தேதி ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அமெரிக்காவிற்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்த அவர் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி அதற்கான பட்டியலையும் வெளியிட்டார்.
இதில் இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. எனினும் இந்தியா உலிட்ட சில நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருந்தது. இதை எடுத்து இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ள ஏதுவாக பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. இதை அடுத்து அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. பிரிட்டன், வியட்னாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வரிவிதிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
அதே நேரம் இந்தியா உளிட்ட சில நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தாத நிலையில் 12 நாடுகளுடனான வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியிருக்கிறார். இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சிறப்பு செயலர் மற்றும் வர்த்தகத்துறை செயலர் ராஜேஷ் அகர்வால் பேச்சு வார்த்தையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அகர்வால் தலைமையிலான இந்திய குழு கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அமெரிக்காவில் முகாமிட்டுருந்தது. பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய அதிகாரிகள் குழு கடந்த நான்காம் தேதி நாடு திரும்பியது.
இதையும் படிங்க: அடங்காத தீவிரவாதிகள்... சுட்டு வீழ்த்துவோம்! சூளுரைத்த இந்திய ராணுவம்
ஜவலி தோல் மற்றும் காலனிகள் சந்தையை அணுக வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்தியா கேட்கிறது. அதே நேரம் அமெரிக்காவோ வேளாண்மை மற்றும் பால்பொருள் சந்தையில் தாராளம் காட்டுமாறு கூறுவதாகவும் கூறப்படுகிறது. வேளான் விலை பொருட்கள் விவகாரத்தில் குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த துறை தொடர்பான விவகாரத்தில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இது பற்றி கூறும்போது அமெரிக்காவுடனான வர்த்தகவரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா அவசரப்படவில்லை.
குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நலன்களை பணையம் வைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது. இந்த விவகாரத்தில் காலக்கெடுவை காரணம் காட்டி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று கூறினார். அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டாலும் சில விஷயங்களில் இந்தியா சர்வதேச மன்றங்களை நாட தயங்கவில்லை. வாகன உதிரி பாகங்கள் மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முறையிட்டது. எனவே இந்தியா மீது அமெரிக்கா தன்னிச்சியாக வரி விதித்தால் அந்த நாடு விதிக்கும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கவும் இந்தியா திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் வாங்குவது குறையும்.
இதனால் அமெரிக்காவிற்கு 65 அயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “போலாம் ரைட்...”... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து... கிரீன் சிக்னல் காட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்...!