ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற U19 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய இளம்படை, தொடர் முழுவதும் தோல்வியேச் சந்திக்காமல் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு, தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் (9) ஏமாற்றம் அளித்தாலும், மற்றொருத் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் விளாசி, U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்றப் புதியச் சாதனையைப் படைத்தார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய கேப்டன் ஆயுஷ் மத்ரே 53 ரன்களும், அபிக்யான் குந்து 40 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் கனிஷ்க் சௌகான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
412 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய இங்கிலாந்து அணிக்கு, கேலப் ஃபால்கனர் 67 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து அச்சுறுத்தல் கொடுத்தார். இருப்பினும், இந்தியாவின் பந்துவீச்சு வியூகத்தை அவர்களால் மீற முடியவில்லை. ஆர்.எஸ். அம்ப்ரிஷ் (3 விக்கெட்) மற்றும் கனிஷ்க் சௌகான் (2 விக்கெட்) ஆகியோரின் துல்லியமானப் பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையும் படிங்க: ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!
இந்த மகத்தான வெற்றியின் மூலம் 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது 2026-லும் கோப்பையை வென்று 6-வது முறையாக மகுடம் சூடியுள்ளது இந்தியா. ஆட்ட நாயகனாக வைபவ் சூர்யவன்ஷியும், தொடர் நாயகனாக கேப்டன் ஆயுஷ் மத்ரேயும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!