இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். 80 வயதான இவர், இந்தியன் ஏர்லைன்ஸ விமானம் IC-814 கடத்தப்பட்ட போது, அஜித் தோவல் தலிபான் மற்றும் கடத்தல் காரர்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்டார். இதேபோல், பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற ஆபரேஷன் பிளாக் தண்டர் (1988) நடவடிக்கையில், அஜித் தோவல் ஒரு ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்தவராக சென்று, உளவுத்தகவலை சேகரித்து வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தார்.

மேலும் 2015-ல் மியான்மாரில் செயல்பட்டு வரும் ஒரு வகை பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் மேற்கொண்ட குறுக்கு எல்லை தாக்குதலை தோவல் திட்டமிட்டு கொடுத்தார். இந்த நடவடிக்கையில் சுமார் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இவ்வாறு அவர் மிஷன்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதுமட்டுமின்றி அவர் அடிக்கடி வெளிநாடு பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் அமல் உண்மை தான்.. ஆனா.. இதை கவனிச்சீங்களா? பிரதமருடன் அஜித் தோவல் சந்திப்பு..!

அதன்படி நமது நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்கு அஜித் தேவால் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இருந்தது. மேலும் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கான 13வது சர்வதேச கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அஜித் தோவல் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது ரஷ்யா பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அஜித் தோவலுக்கு திடீரென உடல் நல பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அஜித் தோவல் பருவ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது ரஷ்யா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பாக்., எகிறினால் மண்டை சிதறி விடும்... சீனாவிடம் எச்சரித்த அஜித் தோவல்..!