2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது தற்போதைய முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தால் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். தற்போது பெரம்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் விஜய் இருக்கிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார். சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் சூழ்நிலையில், திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்து உள்ளார். 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்பு மனுவில் முதல்வர் விஜய் மறைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். மேலும் ரூட் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை அவர் தெரிவிக்கவில்லை என்றும் தனது மனுவில் இனிகோ இருதயராஜ் குற்றம் சாட்டியிருக்கிறார். கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முட்டிப்போட்டு தேவாலயத்தில் விஜய் பிரச்சாரம் செய்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எப்போ ரூ.2,500..? சொன்னதை செய்த பாஜக..! பெண்களை ஏமாற்றிய தவெக..! L.முருகன் விளாசல்..!!
மேலும் பல விதிமீறல், முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளார். விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் இனிகோ இருதயராஜ் தெரிவித்திருக்கிறார். தான் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் கூடாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்.. வெட்கக்கேடு விஜய்..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!.