தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளின் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலை நிகழ்வின் தொடக்கத்தில் கட்டாயமாகப் பாட வேண்டும் என வலியுறுத்தித் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மாநில அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது. கட்டாயமாக்கல்: அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அன்னைத் தமிழின் பெருமையைப் போற்றும் வகையிலும், இளைய தலைமுறையினரிடையே தமிழ் மொழியின் மீதான பற்றை உறுதி செய்யும் வகையிலும் இந்த அரசாணை முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!
மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!