ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்று கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. தணிக்கை சான்று விவகாரத்தில் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது தவறானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
விஜயின் ஜனநாயகம் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காலதாமதம் ஆகும் நிலையில் ஜனநாயகன் படக் குழு உச்சநீதிமன்றத்தை நாடியது. தணிக்கை சான்று வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் படக்குழு மேல்முறையீடு செய்தது.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் சென்சார் பிரச்சனை... சுப்ரீம் கோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்..!
இந்த நிலையில் தணிக்கை வாரியம் படக்குழுவின் மேல்முறையீட்டு மனு மீது கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கேவியட் மனு என்பது ஒரு வழக்கின் மீது விசாரணை நடக்கும் போது தங்களுக்குக் தெரியப்படுத்தாமல் வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதை தெரியப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்படும் மனு. ஜனநாயகன் படகுழுவின் மேல்முறையீட்டின் மீது சென்சார் போர்டு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு வழங்கக் கூடாது என்பதற்காக சென்சார் போர்டு முன்னெடுப்பு ஆகும்.
இதையும் படிங்க: #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!