தவெக நிர்வாகிகளை தாஜா செய்ய அறிமுக கூட்டம் என்ற பெயரில் அசைவ விருந்து வைத்து அவர்களிடம் அன்பை பெற முயற்சிக்கும் அண்மையில் தவெகாவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
கடந்த 2011 முதல் 2026 வரை நடந்த 4 சட்டப்பேரவை தேர்தலில் விராலிமலை தெகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் சி.விஜயபாஸ்கர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். தனது உடல் உயிர் எல்லாம் அதிமுக, அம்மா, எடப்பாடியார் என்று சொல்லி வந்தார். கடந்த 2026 தேர்தலில் எப்படியாவது அதிமுக ஆட்சி அமைக்கும் அதில் அமைச்சர் ஆகிவிடலாம் என்று இருந்த நிலையில் அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,விசிக, ஐயூஎம்எல் என்ற சிறிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் அதிமுகவில் கலக குரல் எழுப்பி சிவி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோருடன் இணைந்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக கட்சிக்கு ஆதரவளித்தால் அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையும் படிங்க: விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
ஆதரவை பெற்றுக்கொண்ட தவெக வெறும் நன்றியுடன் நிறுத்தி கொண்டது. இதில் பெருத்த ஏமாற்றம் அடைந்த சி.விஜயபாஸ்கர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானார். இதில் தவெக முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை தொடங்கினார். இந்த பேச்சுவார்த்தையில் தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகாவில் இணைகிறேன் மீண்டும் விராலிமலை இடைத்தேர்தலில் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் வெற்றி பெற்றவுடன் தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தனது டிமாண்டை தெரிவித்தார். அவரின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறிவிட்டு நிர்வாகிகள் வேறு பணிக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் எப்போதும் பேசும் பொருளாக இருந்த விஜயபாஸ்கர் பல வாரங்களாக அப்போது ஆப்மோட் சென்றுவிட்டார் மேலும் காத்திருந்தால் நம்மிடம் தங்கிய ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுக சென்று விடுவார்களோ என்று எண்ணிய அவர் கோரிக்கையை பிறகு பார்த்து கொள்ளலாம் முதலில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கடந்த ஜூன் 16 அன்று அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.அதை தொடர்ந்து மற்றவர்கள் போல நான் இல்லை விஜய் தலைமையில் தான் கட்சியில் இணைவேன் என்று கூறி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இதனால் இணைப்பு விழா 3 முறை தள்ளிப்போனது, கடைசியில் விஜய் தலைமையில் இணைப்பு இல்லை முக்கிய அமைச்சர்கள் தலைமையில் இணைந்து கொள்ளுங்கள் என்று தவெக தலைமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதில் மனம் நொந்த நிலையில் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கடந்த ஜூலை 2 அன்று மகாபலிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முக்கிய அமைச்சர்கள் தலைமையில் தன்னை தவெகாவில் இணைத்து கொண்டார்.
இந்த நிலையில் விராலிமலை தொகுதியை பொறுத்தமட்டில் இரட்டை இலையில் வாக்கு வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததால் பழைய அதிமுகவினர் விஜயபாஸ்கர் மீது விரக்தியில் இருந்தனர். அதேபோல் இவரது வரவு தவெக நிர்வாகிகளிடமும் பெரும் மகிழ்ச்சி இல்லை இதை உணர்ந்த விஜயபாஸ்கர் தவெக கட்சி அடிப்படையில் விராலிமலை தொகுதியில் 5 ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டுள்ளது (விராலிமலை 3 அன்னவாசல் 2) தவெகவினரை தன்வசம் கொண்டு வரவேண்டும், தன்னை மட்டுமே பேச வேண்டும் என்று எண்ணிய விஜயபாஸ்கர் ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்களை அழைத்து 5 பேருக்கும் ஸ்கார்ப்பியோ கார் வாங்கி தருவதாகவும் நீங்கள் அறிமுக கூட்டம் நடத்தி தரவேண்டும் அதற்கான செலவுகளை தான் முழுமையாக ஏற்று கொள்வதாக கூறி தற்போது ஒவ்வொரு ஒன்றிய பகுதிக்கும் சென்று தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு அசைவ விருந்து வைத்து அவர்களது அன்பை பெற முயற்சித்து வருகிறார்.
அதிமுகவில் ஜாம்பவானக திகழ்ந்த இவர் இன்று இந்த சிறு பிள்ளைகளிடம் சிக்கி தவித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் வேதனைப்பட மனதுக்குள் குமுறுகின்றனர். சில மனிதர்களுக்கு மதுபோதை, மாதுபோதை,சூதுபோதை போல விஜயபாஸ்கருக்கு அதிகார போதை தலைக்கேறி உள்ளது இதனால் தான் அவர் அதிகாரம் எங்கிருக்கிறதோ அதை நோக்கி ஓடுகிறார் என்கின்றனர் அவரது தீவிர ஆதரவாளர்களாக இருந்து அவர் பின்னாள் செல்லாமல் தற்போது அதிமுகாவில் தொடரும் தொண்டர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறாரா புதுக்கோட்டை விஜயபாஸ்கர்?... தவெகவில் தலைவிரித்தாடும் பவர் பாலிடிக்ஸ்...!