சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு துவக்கம் முதலே நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன் படி, அடர்ந்த வனப்பகுதி, மலைகளில் பதுங்கியுள்ள நக்சல்களை ஒடுக்குவதற்காக சிஆர்பிஎப் மற்றும் சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் நக்சல்களை ஒடுக்கும் வேட்டையில் இதுவரை 54 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 பேர் சரண் அடைந்துள்ளனர். நக்சல் இயக்க தலைவன் பசவராஜ் கொல்லப்பட்டதின் மூலம், நக்சல்களுக்கு ஏதிரான சண்டையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: K9 ROLO..! நாலு கால் சாகச வீராங்கனைக்கு CRPF மரியாதை.. துணிச்சல்காரிக்கு கிடைத்த உயரிய கவுரவம்..!

மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் ஏராளமான நக்சல்கள், ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்காவில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர், சத்தீஷ்கார் போலீசார் மற்றும் சிறப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பதுங்கி இருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டனையில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவனான கவுதம் என்கிற சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டான். சுதாகர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மஹாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் செயல்பட்டு வந்த சுதாகரை, பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் தான் பாதுகாப்புப்படை வீரர்களால் சுதாகர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளான். அவனிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. வேறு ஏதேனும் நக்சல்கள் அங்கு பதுங்கி உள்ளார்களா? என தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நடுக்காட்டில் துப்பாக்கிச்சூடு.. மாவோயிஸ்ட் முக்கிய தளபதி காலி.. ஜார்கண்டில் பாதுகாப்பு படை அதிரடி..