கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் 24 வயது மாணவியை, அதே கல்லூரியின் ஊழியர், மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. கொடூரன்கள் 3 பேரும், அவர்களுக்கு உதவியதாக கல்லூரி செக்யூரிட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மெயின் குற்றவாளி மனோஜித் மிஸ்ரா, அந்த மாணவியை மிரட்டி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தான்.
மற்ற 2 மாணவர்களும் அவன் பக்கத்தில் காவலுக்கு நின்றனர். கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்தனர். கொடூரன் மனோஜித் மிஸ்ரா காலில் விழுந்தும் அவன் கேட்கவில்லை. காப்பாற்றும் படி மாணவி கதறியும் செக்யூரிட்டி உதவவில்லை.
இரவு 7:30 மணி முதல் இரவு 10:50 வரை இந்த கொடூர சம்பவம் நடந்தது. முக்கிய குற்றவாளி மனோஜித் மிஸ்ரா, அவனுக்கு உதவிய 2 மாணவர்கள், இவர்களின் மிரட்டலுக்கு பயந்து மாணவிக்கு உதவ மறுத்த செக்யூரிட்டி என 4 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொல்கத்தா மாணவி பாலியல் வழக்கில் பகீர் திருப்பம்.. கிரைம் சீனில் இருந்த 4வது நபர்..!

இதற்கிடையே மூடிய அறையில் மாணவியின் வாக்குமூலத்தை அலிபூர் நீதிபதி பதிவு செய்தார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி முழுமையாக விவரித்தார். இப்போது சம்பவத்தை விசாரிக்க எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை கொல்கத்தா அரசு அமைத்துள்ளது. இவர்கள் தீவிர விசாரணையில் களம் இறங்கி இருக்கின்றனர. இதுவரை நடந்த விசாரணையில் பல முக்கிய ஆதாரங்களை எஸ்ஐடி கைப்பற்றி உள்ளது.

இது பற்றி எஸ்ஐடி போலீஸ் அதிகாரிகள் கூறியது: சம்பவம் நடந்த கல்லூரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம். குறிப்பாக, மாலை 3 மணி முதல் இரவு 10:50 வரையிலான நடந்த நடவடிக்கைகள் முக்கியம் என நினைக்கிறோம். எனவே இந்த 8 மணி நேர சிசிடிவி பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் முக்கிய காட்சிகள் கிடைத்து இருக்கின்றன.
மாணவியை மனோஜித் கூட்டாளிகளான 2 மாணவர்களும் மெயின் கேட் பகுதியில் இருந்து செக்யூரிட்டி அறைக்கு இழுத்து செல்லும் காட்சியை கைப்பற்றி இருக்கிறோம்.

செக்யூரிட்டி அறைக்கு வெளியே செக்யூரிட்டி காத்திருக்கும் காட்சிகளும் உள்ளன. கொடூரன் மனோஜித் மிஸ்ரா மாணவியை பலாத்காரம் செய்யும் போது மற்ற மாணவர்கள் 2 பேரும் எடுத்த வீடியோ கிளிப்களையும் அவர்களது போனில் இருந்து எடுத்து இருக்கிறோம். அந்த வீடியோக்களின் மொத்த நீளம் 90 வினாடி இருக்கிறது. இது மனோஜித் மிஸ்ராவுக்கு எதிரான மிகவும் வலுவான ஆதாரமாக இருக்கும். இது தவிர வேறு ஏதேனும் வீடியோக்கள் அந்த செல்போன்களில் இருக்கிறதா என்ற தடயவியல் ஆய்வும் நடக்கிறது.
இதையும் படிங்க: கொல்கத்தா மாணவி பாலியல் வழக்கில் பகீர் திருப்பம்.. கிரைம் சீனில் இருந்த 4வது நபர்..!