இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. இதேபோல், 2024-2025 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புனையப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி பீஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: என்னை பேசவே விடல.. இது என்ன பாரபட்சம்! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!
இது தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் விவாதிக்க வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அதன் அச்சுறுத்தல் குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்...க்ரீன் சிக்னல் காட்டிய கார்த்தி சிதம்பரம்!