பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் என்ற தலைப்பில் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று அவர் பேசியதாவது: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா Trachoma இல்லாத நாடு என அறிவித்துள்ளது.
இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் இதற்கு பங்களித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாகவும் இந்தியா உருவாகியுள்ளது.
கடந்த ஜூன் 21ல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யோகா தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் நமது பாரம்பரியம் முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது. விசாகப்பட்டினத்தில் 3 லட்சம் பேர் கடற்கரையில் யோகா செய்தனர். 2,000 ஆதிவாசி மாணவர்கள் 108 நிமிடங்கள் 108 சூரிய நமஸ்காரம் செய்தனர். தெலங்கானாவில் 3,000 மாற்றுத்திறனாளிகள் யோகா முகாமில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!

நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. இது பக்தர்களுக்கு விருப்பமானதாக இருக்கும். ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த யாத்திரைகளில் பங்கேற்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.நாட்டில் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெறுகின்றனர். இது 2015-ல் 25 கோடியாக மட்டுமே இருந்தது. இப்போது மிக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
மேகாலயாவின் எரி பட்டு பட்டுக்கு GI குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது. இது உலக சந்தையில் புகழ் பெற உதவும். அனைவருக்கும் சர்வதேச யோகா தினம் நினைவுகள் இருக்கும். இந்திய கடற்படையின் கப்பல்களிலும் பிரமாண்ட முறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. டில்லி யமுனை நதிக்கரையில் மக்கள் யோகா செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் மக்கள் யோகா செய்தனர்.

அனைவருக்கும் சர்வதேச யோகா தினம் நினைவுகள் இருக்கும். இந்திய கடற்படையின் கப்பல்களிலும் பிரமாண்ட முறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. டில்லி யமுனை நதிக்கரையில் மக்கள் யோகா செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் மக்கள் யோகா செய்தனர்.
எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் பெரிதும் சித்ரவதை செய்யப்பட்டனர்.

இன்று நாட்டின் 95 கோடி பேர் ஏதேனும், ஒரு சமூக நலன் பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைகின்றனர். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த நேரத்தில் அனைவரது பார்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது உள்ளது. இந்தியா ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பேசினேன். இன்னும் சில நாட்கள் சுக்லா விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த திட்டம் குறித்து அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சியில் விரிவாக பேசுவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: எந்த மொழிக்கும் இந்தி எதிரி இல்லை.! நண்பன் தான்.!! தாய்மொழி குறித்து அமித்ஷா வைத்த ட்விஸ்ட்..!