இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், வணிக எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விலை இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் சூழலில், எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.990 உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே எனக் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

சமையல் எரிவாயு விலை உயர்வை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தி இருப்பதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவு நெருங்கியாச்சு..! திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய சந்திப்பு..!!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை என்ற குற்றம் சாட்டினார். இப்போது போர் சூழல் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல என்றும் கண்டனம் தெரிவித்தார். இந்த சிலிண்டர்கள் விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற வலியுறுத்தினார். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!