டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இடம்பெற்றுள்ள பெயர்களில் ரத்தேஷ் ராஜ் என்ற பெயரும் இருக்கிறது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அசோசியேட்டாக இருந்ததும் தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரத்தேஷ் ராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வருவதால், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.
குறிப்பாக, இவர் போலீசாரின் விசாரணையில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!
குறிப்பாக, தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் சகோதரரான இந்த ரத்தேஷ் ராஜ் மீது கடந்த ஜூலை மாதம்தான் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் இவரும் ஒருவர் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரியவருகிறது.
குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல்களில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அதாவது, இவர்தான் இடைத்தரகராக செயல்பட்டிருப்பதும், டாஸ்மாக் தொடர்பான முக்கிய முடிவுகளில் இவர் சட்டவிரோதமாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக அதில் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஏற்கனவே இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்திருக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இது தொடர்பாக ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில்தான், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது முக்கிய நபராகப் பார்க்கப்படக்கூடிய ரத்தேஷ் ராஜுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், இதில் பார்கள், டெண்டர் உரிமைகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் எடுக்கக்கூடிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது ரத்தேஷ் ராஜ் தலைமறைவாக இருப்பதால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!