தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், சிறுவயதிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இரு சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவா ஆகியோர். இவர்கள் தங்கள் குழந்தைத்தனமான குரலில், அப்பாவித்தனமான வார்த்தைகளால், சுவாரஸ்யமான உரையாடல்கள், நகைச்சுவை நிறைந்த வீடியோக்கள் மற்றும் சில சமயங்களில் சமூக விழிப்புணர்வு தரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பல லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளன. குழந்தைகளின் இயல்பான வெளிப்பாடு மற்றும் அவர்களின் உள்ளடக்கங்கள் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளன.இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த இரு சிறுவர்களையும் சந்தித்து உரையாடியது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சந்திப்பு தமிழக அரசின் குழந்தைகள் நலன், இளம் தலைமுறையினரின் திறமை வளர்ப்பு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உருவாகும் நேர்மறையான செல்வாக்கை அங்கீகரிக்கும் வகையில் அமைந்தது. ஹாய் காய்ஸ் நான்தான் உங்க தேவா, இவன் என் தம்பி ஜீவா என்று அந்த சிறுவர்களின் பேச்சு தோரணை சமூக வலைதளங்களில் முக்கியத்துவம் பெற்றது. அவர்கள் வெளியிடும் வீடியோக்களும் வைரலானது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தேவா மற்றும் ஜீவா ஆகிய இரண்டு சிறுவர்களும் கலகலப்பாக உரையாடினர்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.
அப்போது உங்க நாய்க்குட்டி பற்றி சொல்லுங்க சார் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் அந்த சிறுவர்கள் கேட்டு உரையாடினார். தற்போது ஒரு திருக்குறள் சொல்லுங்கள் பார்ப்போம் என்று அந்த சிறுவர்களை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த சந்திப்பு குறித்து கூறிய முதல்வர் ஸ்டாலின், படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.
இதையும் படிங்க: மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!