லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் இரண்டாவது பிரதமராக 1964 முதல் 1966 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு முறை தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பிரபலமானது. 1956 ஆகஸ்ட் 25ஆம் தேதி, தமிழ்நாட்டின் அரியலூர் அருகே மகாமை பாலத்தில் நடந்த ரயில் விபத்தில் சுமார் 150 பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு பொறுப்பேற்று, லால் பகதூர் சாஸ்திரி தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரிய முன்மாதிரியாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அவர் தார்மீகப் பொறுப்பை ஏற்று பதவி விலகினார்.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் விமான விபத்து... 170 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி..

இதேபோல குஜராத்தில் நடந்துள்ள விமான விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், 1950களில் ஒரு ரயில் தடம் புரண்டபோது, லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். அதே ஒழுக்கத்தின் அடிப்படையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நாயுடு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன்.

அப்போதுதான் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படும். மோடியும் அவரது கூட்டாளிகளும் இதுவரை செய்து வரும் அனைத்துமே அதிரடியான செயல்கள்தான், ஆனால் அவை நிறுத்தப்பட வேண்டும் நீங்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாப்பிள்ளை அவர்தான், போட்டிருக்க சட்டை என்னோடது... அமித் ஷாவை லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்!