குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சிக்னலை இழந்த நிலையில், விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் 170 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த விடுதியில் விமான விபத்து நிகழ்ந்தது. இந்த நிலையில், விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த 20 பயிற்சி மருத்துவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.