ஷாபாஸ், முனீர் ஆகியோரால் தாங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்ட சீன விமானத்தை ரஹீம் யார் விமான தளத்தில் தரையிறக்க முடியுமா என்று ஒவைசியின் சவால் விடுத்துள்ளார்.
ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் முனீர், பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இந்தியா ஏற்படுத்திய பேரழிவிற்குப் பிறகு, சீன விமானத்தை ரஹீம் யார் கான் விமான தளத்தில் தரையிறங்க முடியுமா? என்று முனீர்- ஷாபாஸிடம் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

மே 10 அன்று, இந்தியா, பாகிஸ்தானில் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்து, பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹீம் யார் கான் விமான தளம் உட்பட அதன் பல விமான தளங்களை அழித்தது. சீனாவின் ஆயுதங்களைப் பற்றி பாகிஸ்தான் மிகவும் பெருமைப்பட்டது. ஆனால் இந்தியாவுடனான மோதலில் சீன ஆயுதங்களை அழித்து எந்த உத்தரவாதமும் இல்லை என்பதைக் காட்டியது. இதைப் பற்றி விமர்சித்த ஒவைசி, ஷாபாஸ், முனீர் சீன விமானத்துடன் ரஹீம் யார் கான் விமான தளத்தில் தரையிறங்குவார்களா? என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: பழி வாங்க நேரம் வந்திருச்சு... பாகிஸ்தான் 100 முறை யோசிக்கணும்... ஒவைசி ஆவேசம்..!

ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் உள்ளிட்ட பல பாகிஸ்தான் இராணுவ நிறுவல்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் கடுமையான எதிர் தாக்குதலைத் தொடங்கின. பஸ்ரூர் மற்றும் சியால்கோட் தளங்களில் உள்ள ரேடார் தளங்களும் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி குறிவைக்கப்பட்டு, பெரும் சேத்தை ஏற்படுத்தின.
இந்த சண்டையில் 35-40 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா தனது இலக்குகளை அடைந்துள்ளதாகவும் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார். மே 9 மற்றும் 10 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவின் முக்கிய இராணுவ நிலைகளை குறிவைக்க முயன்றதை அடுத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதே நேரத்தில், ரஹீம் யார் கான் துணை ஆணையர் குர்ராம் ஜாவேத், இந்தியா ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் விமான நிலையத்தை குறிவைத்ததாகக் கூறினார். இந்தத் தாக்குதலில் ராயல் லவுஞ்ச் அழிக்கப்பட்டதாகவும், விமான நிலையத்தின் ஏப்ரன் பகுதியில் 10 அடி அகலமான பள்ளம் உருவாக்கப்பட்டதாகவும் ஜாவேத் கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!