சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு உலக அரசியலில் பெரிய அலையை ஏற்படுத்தியிருக்கு. நேற்று (ஆகஸ்ட் 31, 2025) தொடங்கிய இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் ஒன்றுகூடி சிரித்து பேசி, கைக் கொட்டி, கூட்டணி வலிமையை காட்டினாங்க.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு அழுத்தங்களுக்கு எதிரா இந்தியாவின் தனித்துவமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துது. இந்த சந்திப்புகளுக்கு இடையே, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 'எக்ஸ்' (X) தளத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டிருக்கு – "அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டுது, 21ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் உறவு"னு. இது அச்சத்தின் அறிகுறியா? இல்லை, உறவை வலுப்படுத்தும் முயற்சியா?
2001-ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகளால் தொடங்கப்பட்ட SCO இப்போ 10 உறுப்பு நாடுகள் – இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் உட்பட – மற்றும் 16 பார்வையாளர்/பேச்சு துணை நாடுகளை கொண்டது. தியான்ஜின் மெய்ஜியாங் கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இந்த 25ஆவது உச்சி மாநாடு SCO வரலாற்றில் மிகப்பெரியது.
இதையும் படிங்க: வந்ததுமே சரவெடி தான்!! பொருளாதார தடைக்கு எதிராக ஒருமித்த கருத்து!! ட்ரம்பை சீண்டும் புடின்!
20-க்கும் மேற்பட்ட தலைவர்கள், ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஏசியான், காமன்வெல்த் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சீனா இதை "புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் தளம்"னு விவரிக்கிறது, குறிப்பா டிரம்பின் வர்த்தகப் போர், உக்ரைன் போர், டாலர் சார்பில்லா வர்த்தகம் போன்ற விஷயங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததா பார்க்கப்படுது.
பிரதமர் மோடி 2018-க்குப் பிறகு முதல் முறையா சீனாவுக்கு வந்திருக்கார். ஜின்பிங் தானா விமான நிலையத்தில் வரவேற்றார். மோடி நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லெயிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் உள்ளிட்டவர்களை சந்திச்சு வர்த்தகம், பாதுகாப்பு, இணைப்பு பற்றி பேசினார்.
மோடி-ஜின்பிங் சந்திப்பில் "இந்தியா-சீனா போட்டியாளர்கள் இல்லை, துணைவர்கள். எல்லை அமைதி இன்சூரன்ஸ் போல"னு சொல்லி, எல்லை பிரச்சினை தீர்வு, வர்த்தகம் அதிகரிப்பு, விசா ஈசி, நேரடி பிளைட்கள் மீண்டும் தொடங்குதல் பற்றி ஒப்பந்தம். மோடி 2026 BRICS உச்சி மாநாட்டுக்கு ஜின்பிங்கை அழைச்சார், சீனா ஆதரவு தெரிவிச்சது. இந்தியா-சீனா உறவு 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்டது, ஆனா இப்போ தொடக்கம்.

இன்று (செப்டம்பர் 1) மோடி-புதின் சந்திப்பு நடந்தது. அவங்க மூணு பேரும் சிரித்து பேசினாங்க, "கடின காலங்களில் தோள் தோள் தொட்டோம்"னு மோடி சொன்னார். இந்த சந்திப்பு டிரம்பின் அழுத்தங்களுக்கு எதிரானது. டிரம்ப் இந்தியாவுக்கு 25% வரி விதிச்சு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் 50% ஆக்கிவிட்டார். ரஷ்யாவுக்கு உக்ரைன் போர் சான்க்ஷன்கள், சீனாவுக்கு வர்த்தகப் போர்.
இந்த சூழலில் இந்த மூன்று தலைவர்களும் சந்திச்சது தற்செயலா? கூடாது! அவங்க இந்தியா-சீனா-ரஷ்யா ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம், அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரா பதில் திட்டம் வகுக்கலாம், BRICS புதிய வங்கி விரிவாக்கம், ஆற்றல் வர்த்தகம் – இப்படி பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கும். புதின் "SCO சவால்களுக்கு பதில் சொல்லும் திறனை வலுப்படுத்தும்"னு சொன்னார்.
இந்த சந்திப்புகளுக்கு இடையே, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கு: "அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது. இது 21ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் மிகச்சிறந்த உறவு. நமது மக்கள் மற்றும் நமது முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.
புதுமை, தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் என அனைத்து துறைகளிலும் நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தின் எரிசக்தியாக விளங்குகிறது." இது SCO சந்திப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்னரே வெளியானது. அமெரிக்கா அச்சமா இருக்கா? டிரம்பின் தாராளமான வர்த்தகக் கொள்கை இந்தியாவை SCO-Brics நோக்கி தள்ளியிருக்கு, ஆனா இந்த ட்வீட் உறவை வலுப்படுத்தும் முயற்சியா தெரிகிறது. இந்தியா அமெரிக்காவுடன் QUAD, iCET போன்ற ஒத்துழைப்புகளை தொடர்ந்தாலும், ரஷ்யா-சீனாவுடன் சமநிலை வகிக்கிறது.
இந்த மாநாட்டில் பயங்கரவாதம், பிராந்திய பாதுகாப்பு, இணைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு விவாதங்கள். மோடி உரையில் "பயங்கரவாதம் மனிதகுல சவால்"னு சொல்லி, பஹல்காம் தாக்குதலை கண்டிச்ச SCO தியான்ஜின் டிக்ளரேஷன் வெளியானது. SCO 10 வருஷ திட்டம், SCO டெவலப்மென்ட் பேங்க் போன்றவை அறிவிக்கப்பட்டன. ஆனா, இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை, ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான் அணு திட்டம் – இவை சவால்கள். சீனா இதைப் பயன்படுத்தி ஐரோப்பா-ஆசியாவில் செல்வாக்கை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு ஆப்படிக்க தயாராகும் கூட்டணி!! இந்தியா, ரஷ்யா, சீனா தலைவர்கள் ஒற்றுமை!