இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வர்த்தக உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜத்நாத் சிங், பாகிஸ்தான் உடனான இந்தியாவின் கொள்கை நிலைபாடு குறித்து விவரித்தார். இதுதொடர்பாக விரிவாக பேசிய அவர்,
"இந்தியா தனது உத்தியையும் பயங்கரவாதத்திற்கான பதிலையும் மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எங்கள் சொந்தக்காரர்களாக உள்ளனர். எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்று நான் நம்புகிறேன்.

இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நமது சகோதரர்களும் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலைக் கேட்டு இந்தியாவின் பிரதான நீரோட்டத்திற்குத் திரும்புவார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இதையும் படிங்க: பழத்தோட்டத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்.. ராணுவம், போலீஸ், சிஆர்பிஎப் படையினர் கூட்டாக செய்த தரமான சம்பவம்..!
இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கோடிக்கும் குறைவாக இருந்தது; இப்போது அது ரூ.23,500 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. பயங்கரவாதத்தை நடத்துவது செலவு குறைந்ததல்ல. இன்று, பாகிஸ்தான் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தீர்மானத்திற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பாக்., ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியபோது கட்டுப்பாடுடன் நடந்துகொண்டது; பாக்., பயங்கரவாத முகாம்கள், எதிரிகளின் விமான தளங்கள், ராணுவ நிலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் தங்கள் திறனையும், வலிமையையும் வெளிப்படுத்தி முழு உலகையும் ஆச்சரியப் படுத்தியது. நாங்கள் போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளை மட்டும் உற்பத்தி செய்யவில்லை; அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பங்களுக்கும் நாங்கள் தயாராகி வருகிறோம்.
மேட் இன் இந்தியா எனும் திட்டம்தான் நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திறன் நம்மிடம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிராக இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது. முதலில் பயங்கரவாத மறைவிடங்களை அழித்தோம். பின்னர் விமானத் தளங்களை அழித்தோம். நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்திருக்கலாம். ஆனால் அதிகாரத்துடன் கட்டுப்பாடும் இருந்திருக்க வேண்டும். நாம் நிதானத்தைக் கடைப்பிடித்தோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் சுயமரியாதையுடனும் தங்கள் சொந்த விருப்பத்துடனும் இந்தியாவில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் நம்முடையவர்கள். அவர்கள் நம் குடும்பத்தின் ஒரு பகுதியினர். பிரதமரின் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுவரை கொடுத்ததுலேயே இதுதான் மரண அடி! பாகிஸ்தானுக்கு எதிராக பிரான்சில் இந்திய எம்.பிக்கள் குழு சூளுரை..