அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி - 7 அமைப்பு அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கனடாவில் நடக்கவுள்ள, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக சைப்ரஸ் குடியரசின் தலைவர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15, 16 தேதிகளில் சைப்ரஸுக்கு செல்ல உள்ளார். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் சைப்ரஸுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் ரூபானி இல்லை என்பதை இதயம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்!

அங்கு அந்நாட்டு பிரதமர் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் நிலையில், லிமாசோலில் வணிகத் தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதன் பிறகு ஜூன் 16, 17 ஆம் தேதிகளில் கனடாவில் உள்ள கனனாஸ்கிஸுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை, குறிப்பாக AI-ஆற்றல் இணைப்பு மற்றும் குவாண்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்கள், பிற அழைக்கப்பட்ட வெளிநடவடிக்கை நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!