சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெண்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் 'நாரி சக்தி' (பெண் சக்தி) அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் தேசக் கட்டுமானத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பெருமிதத்துடன் உரையாற்றினார்.
இந்தியப் பெண்களின் சக்தி அபாரமானது. அவர்களின் சாதனைகள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதுடன், ஒரு வளமான தேசத்தை நோக்கிய நமது பயணத்திற்குப் பெரும் வலிமை சேர்க்கின்றன" எனப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அடிமட்டத்தில் இருந்த பெண்களின் வாழ்க்கை, இன்று எப்படி வியக்கத்தக்க வகையில் மாறியுள்ளது என்பதைப் பார்த்தாலே புரியும். இது வெறும் வளர்ச்சியல்ல, ஒரு மிகப்பெரிய சமூக மாற்றம்" என அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!
பெண்களின் முன்னேற்றமே அரசின் அனைத்துத் திட்டங்களின் மையப்புள்ளி எனக் குறிப்பிட்ட அவர், முத்ரா யோஜனா, உஜ்வாலா மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற திட்டங்கள் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அவர்களின் கனவுகள் நனவாக நாங்கள் என்றும் துணை நிற்போம்" என அவர் தனது அறிக்கையில் உறுதி அளித்தார்.
வழக்கம் போல இம்முறையும் தனது சமூக வலைதளக் கணக்குகள் மூலம் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து, அவர்களின் உழைப்பிற்குப் பிரதமர் மோடி தலைவணங்கினார்.
இன்று மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாடு முழுவதும் பல்வேறு மகளிர் தின விழாக்களில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டு, 'புதிய இந்தியாவின் பெண் சக்தி' (#NayeBharatKiNariShakti) என்ற முழக்கத்துடன் மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை அறிவிப்பு!