மேற்காசியா (மிடில் ஈஸ்ட்) தற்போது பெரும் போர் பதற்றத்தில் உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் மீதும் (குவைத், யுஏஇ, பஹ்ரைன் போன்ற நாடுகளில் உள்ளவை) ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பிராந்தியம் முழுவதும் பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக யுஏஇ, சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் பல இந்திய குடும்பங்கள் வசிக்கின்றன.
இதையும் படிங்க: தொடங்கியது நீங்கள்தான்! முடிவு உங்கள்கையில் இல்லை!! இஸ்ரேல், அமெரிக்காவை எச்சரித்து ஈரான் பதில் தாக்குதல்!
போர் தீவிரமடைந்தால் அவர்களின் உயிர் பாதுகாப்பு, திரும்பி வருதல் போன்றவை பெரும் சவாலாக உள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக செயல்பட்டார்.
நேற்று (மார்ச் 1, 2026) மதுரையில் இருந்து டெல்லிக்கு திரும்பிய பிரதமர் மோடி, இரவு உடனடியாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இந்த உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மேற்காசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கள நிலவரம், தேவைப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்து வருவது உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட்டன. CCS கூட்டம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும், உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானின் தாக்குதல்களால் UAE-யில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை கண்டித்து, இந்தியா UAE உடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்தார்.
UAE-யில் உள்ள இந்தியர்களை பாதுகாத்ததற்காக நன்றி தெரிவித்தார். இந்தப் பேச்சு இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது.
இந்திய அரசு தற்போது அனைத்து GCC நாடுகளுடனும் தொடர்பில் உள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள அதிகாரிகளுடன் பேசி இந்தியர்களின் நலனை உறுதி செய்து வருகிறார். போர் தொடர்ந்தால் இந்தியர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன.
இதையும் படிங்க: எல்லாரும் ரிப்போர்ட் கார்ட் காட்டுங்க!!! மத்திய அமைச்சர்களுக்கு மோடி கிடுக்குப்பிடி! பரபரக்கும் டெல்லி!