ஒடிசா சென்றுள்ள பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். தற்போது பேசிய அவர், ஜூன் 20 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்றும் ஒடிசாவில் முதல் பாஜக அரசு வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது என்றும் நல்லாட்சி நிறுவப்பட்ட ஆண்டு எனவும் கூறினார். ஒடிசா மக்களுக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் பேசினார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை, அசாமின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நிலையற்ற தன்மை, வன்முறை, இவை அனைத்தும் அசாமில் காணப்பட்டன. ஆனால் இன்று, அசாம் வளர்ச்சியின் புதிய பாதையில் செல்கிறது என தெரிவித்தார்.

ஒடிசாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருவதாகவும் துரதிஷ்டவசமாக கடந்த காலத்தில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த கட்சி பழங்குடியினரை தனது அரசியலுக்காகப் பலர் பயன்படுத்தி வந்ததால், இந்த மக்கள் பழங்குடி சமூகத்திற்கு வளர்ச்சியையோ பங்கேற்பையோ கொடுக்கவில்லை என்றும் இந்த மக்கள் நாட்டின் பெரும்பகுதியை நக்சலிசம், வன்முறை மற்றும் ஒடுக்குமுறையின் நெருப்பில் தள்ளியதாவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

கடந்த ஆண்டுகளில், பழங்குடி சமூகத்தை வன்முறையிலிருந்து மீட்டு, புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தாங்கள் பணியாற்றி வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஒடிசாவில் உள்ள ஏழைக் குடும்பங்கள் ஆயுஷ்மான் யோஜனாவின் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால் இப்போது ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் கோபபந்து ஜன் ஆரோக்கிய யோஜனா இரண்டும் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, ஒடிசாவில் சுமார் மூன்று கோடி மக்கள் இலவச சிகிச்சை பெறுவார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டிலிருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாஜக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளதால் நக்சலைட் தொடர்பான வன்முறை இப்போது வெறும் 20 மாவட்டங்களுக்குள் மட்டுமே உள்ளது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!