இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிசக்தியில் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த புதிய ரயில் சேவை, ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் மற்றும் சோனிபட் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது.
தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் இந்தியாவின் இலக்கையும், நிலையான மற்றும் பசுமையான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியையும் முன்னெடுக்கும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஹைட்ரஜன் ரயில், வழக்கமான மின்சார ரயில்களைப் போல வெளிப்புற மின்சாரத்தை சார்ந்து இயங்காது. மாறாக, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான வேதியியல் வினையின் மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரம் உற்பத்தி செய்து அதனை இயக்கத்திற்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பெண்ணிடமே விசில் அடித்து சீண்டல்... மதுபோதையில் ஆபாசமாக பேசிய சேட்டை இளைஞருக்கு ஆப்பு...!
1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல (Fuel Cell) உந்துவிசை அமைப்புடன் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வரை வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் சுமார் 2,600 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜிந்த் – சோனிபட் இடையிலான 89 கிலோமீட்டர் தொலைவை சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களையும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!