தென்னிந்திய கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஜில் கிளைமேட்! ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மேலும், திருநெல்வேலி, நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் மின்னல், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முக்கிய வானிலை அப்டேட்! குளுகுளு கிளைமேட்! நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!