தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் நிறைவடைகிறது. எனவே அதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டமன்றப் பேரவைச் செயலக கூடுதல் செயலாளர் சீனிவாசனிடம் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், பக்ரீத் விடுமுறை நாளான ஜூன் 7ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 8ஆம் தேதி தவிர பிற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ரெண்டே சீட்டு! பங்கு போடும் நிர்வாகிகள்.. ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிக்கிறது அதிமுக!

இதனை அடுத்து திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மையத்திற்கு திமுக ஒதுக்கியுள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் அக்கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. மேலும் வரும் 4ம் தேதி திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: முதல்வர் வழிகாட்டுதலில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்! ராஜ்யசபா திமுக வேட்பாளர்களை வாழ்த்திய உதயநிதி...