இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவசர நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
2 ஆண்டுகளாக நீடித்த அவசர நிலை இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக ஆட்சியமைத்த உடன் 1977 மார்ச் 21ம் தேதி திரும்பப்பெறப்பட்டது. இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டு கடந்த 25ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்; அவர் பேசியதாவது; 1975 ஆம் ஆண்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இதையும் படிங்க: பயங்கரவாதம் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்! ஓசாமா பின்லேடன் நியாபகம் இருக்கா? ஜெய்சங்கர் வார்னிங்

மாணவர்கள் விடுதியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவர்களில் சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இப்படி நடப்பது சாதாரணமானது அல்ல. இது அனைத்தும் நாட்டின் மன உறுதியைக் குறைக்கவே செய்யப்பட்டது.
1975 ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது நான் ஒரு மாணவனாக இருந்தேன். என்ன நடந்தது, எல்லோரும் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவசரநிலையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம், “சுதந்திரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்பதுதான்.
அவசரநிலை அரசியலுடன் தொடர்புடையது என்று எல்லோரும் கருதுகிறார்கள். ஆனால் அது, கலை, கலாச்சாரம், சினிமா, கல்வி உட்பட நாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்தது. அனைவரின் வாழ்க்கை முறையையும் பாதித்தது.

எமர்ஜென்சியின் போது, அரசியலமைப்பு 5 முறை திருத்தப்பட்டது. அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவசர நிலை காலத்தின்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நமது மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது தொடர்பான செய்திகளை நாம் கேட்டிருப்போம். கடலில் இலங்கை எல்லைக்குள் சில பகுதிகளுக்கு இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என ஒப்பந்தம் இருந்தது.
ஆனால், அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது அந்த ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டன. இதனால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டதற்கான விளைவுகள் தமிழ்நாட்டில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எமர்ஜென்சி கொண்டு வந்ததற்காக இந்திரா குடும்பத்தினர் ஒருபோதும் வருத்தம் தெரிவித்ததில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அதை எதிர்த்தனர். இது, ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது என்பதை நிரூபிக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசுபவர்கள் அதன் உணர்வை காக்க தவறிவிட்டனர்.
எமர்ஜென்சிக்கு இன்னும் மன்னிப்பு கேட்காதவர்களிடம், அரசியலமைப்பு சட்டம் பற்றி நீங்கள் என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது. அதை மனதார மதிக்க வேண்டும் என ஜெய்சங்கர் கூறினார்.
இதையும் படிங்க: தீவிரவாதம் தொடர்ந்தால் தேடி சென்று அழிப்போம்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் வார்னிங் மெசேஜ்..!