மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஜூன் 8 முதல் ஜூன் 14 வரை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸ் வந்தார். அங்கு ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஐரோப்பிய நியூஸ் வெப்சைட்டு 'யூராஆக்டிவ்'க்கு (European news website 'Euractiv') பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்துக் கூறியதாவது: உங்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். பாகிஸ்தான் ராணுவ நகரம் ஒன்றில் நீண்டகாலம் பாதுகாப்பாக இருந்ததாக அவர் ஏன் உணர்ந்தார் ? உலகம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இது இந்தியா–பாகிஸ்தான் பிரச்னை மட்டும் இல்லை. பயங்கரவாதம் பற்றியது. அது கடைசியில் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்.
இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..
இந்தியா சுதந்திரம் அடைந்த சில மாதங்களில், பாகிஸ்தான் காஷ்மீருக்கு படையெடுப்பாளர்களை அனுப்பியது. அவை இந்திய எல்லைகளை மீறின. அப்போது மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன.
அது எங்களுக்கு நீண்டகால குறையாகவே இருக்கிறது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டன. இந்தியா ஏன் அதில் சேரவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

போர் மூலம் வேறுபாடுகளை தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. போர்க் களத்தில் இருந்து ஒரு தீர்வு வருமென நம்பவில்லை. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், என்ன தீர்வு இருக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கக் கூடாது. நாங்கள் தீர்ப்பு தருபவர்களும் இல்லை, தீர்வை பரிந்துரைப்பவர்களும் இல்லை. அதே சமயம் உக்ரைன் – ரஷ்யா பிரச்னையில் நாங்கள் தலையிடாமலும் இல்லை. இந்தியா ரஷ்யாவுடன் மட்டுமல்ல, உக்ரைன் நாட்டுடனும் வலுவான உறவை வைத்திருக்கிறது என டாக்டர் ஜெய்சங்கர் கூறினார்.
அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நட்பையும் வளர்ப்பதே எங்கள் நோக்கம். அமெரிக்கா எங்களுக்கு முக்கியமான நாடு. அந்த நாட்டில் யார் அதிபராக இருந்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த நாட்டுடனான உறவு எங்களுக்கு முக்கியம் என கூறினார்.
இதையும் படிங்க: மாட்டிக்கிட்டியே பாக்., சேதமடைந்த விமானப்படை தளங்கள் தார்ப்பாய் போட்டு மூடல்.. வெளியானது ஆதாரம்..!