ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார வாகனத்தை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயக்குமார் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஜெயக்குமார் வேண்டுமானால் எங்கள் அணிக்கு வரலாம். அவருக்கு அதிமுகவில் சீட்டு கிடைக்கப் போவதில்லை அவரது மகனுக்கு மட்டும்தான் சீட்டு கிடைக்கும். அந்த ஆதங்கத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார். அவருடைய கருத்துக்கெல்லாம் கருத்துச் சொல்ல முடியாது. அவர் என்னுடைய நண்பர்.
ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உதிப்பதையெல்லாம் சொல்லக்கூடாது என்றும் தனித்து நின்று முதலமைச்சர் ஆவதற்கு விஜய் இருக்கின்றார். மற்றவர்களிடம் வாக்கு கேட்கிற அளவிற்கு அவர் இல்லை. 18 வயது முதல் 45 வயது வரை இருக்கும் அனைவரின் மன நிலையை புரிந்து கொண்டு மற்றவர்கள் பேச வேண்டும்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்..?? தவெக மும்முரம்..!!
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கொள்கை, மற்ற கட்சிகளுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு மற்றவர்கள் ஆட்சியில் பங்கு தர முடியாது என்று கூறி விட்டார்கள். நாங்கள் ஆட்சியில் பங்கு என்று அறிவித்ததால் தான் அவர்களும் மற்ற கூட்டணிகளில் பங்கு கேட்கிறார்கள். இதனால் அவர்களுக்கு புத்துணர்வு கிடைத்திருக்கிறது வருகிறவர்களை வரவேற்போம் அதில் என்ன தயக்கம் இருக்கிறது.
ஜெயக்குமார் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அவர் எனது நண்பர் வருவதாக சொல்லட்டும் அதற்குப் பிறகு அதைப்பற்றி பேசலாம் வருவாரா ஏற்றுக்கொள்வீர்களா என்பதற்கு பதில் சொல்ல முடியாது அதை பற்றி தலைவர் இடத்தில் சொல்லுவோம்.
புகழேந்தி புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் என்ற கேள்விக்கு, அவர் எனது நண்பர் மட்டுமல்ல, அவர் பலருடைய நண்பர் எனக்கூறினார்.
இதையும் படிங்க: கைவிரித்த காங்கிரஸ்... தவெக தனித்து போட்டியா? ... செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்...!