கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழும்புவில் இருந்து மும்பைக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த கப்பலில் தீ விபத்தானது நிகழ்ந்தது. கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் துறைமுகத்திலிருந்து 45 கடல் மைல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் சேர்ந்த இந்த சரக்கு கப்பலில் சுமார் 200 கண்டெய்னர்கள் இருந்தன. கப்பலில் இருந்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், நான்கு பேரை காணவில்லை என கூறப்படுகிறது . இந்திய கடலோர காவல் படை உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நடுக்கடலில் இரண்டாவது நாளாக சரக்கு கப்பலில் தீ பற்றி எரிந்த நிலையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கண்டெய்னர்களில் பற்றிய தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புகை மூட்டமாக காணப்படுகிறது. தீப்பிடித்த கப்பலில் நச்சு ரசாயனங்கள் இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்..!

அச்சு மை, வார்னிஷ், பெயிண்ட், அமிலம் உள்ளிட்டவை கண்டெய்னர்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 200 கண்டெய்னர்கள் இருக்கும் நிலையில் கண்டைனர்களில் நச்சுப் பொருட்கள் இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: நடுக்கடலில் அதிர்ச்சி: பற்றி எரிந்த சரக்கு கப்பல்.. மாலுமிகளின் நிலை என்ன?