இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முக்கியமான ஒரு நாளாக இன்று அமைந்துள்ளது. கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட ஐந்து புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சூர்யா காந்த் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை வலுப்படுத்துவதோடு, பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் கோவை பெண் வழக்கறிஞர் வி. மோகனா .1966ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி பிறந்த இவர், 1988ஆம் ஆண்டு கோவை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்றத்தில் 1996ஆம் ஆண்டு அட்வகேட்-ஆன்-ரெக்கார்டாக பதிவு செய்யப்பட்டு, 2015ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் இவர் வாதாடியவர். இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் நேரடியாக பார் கவுன்சில் மூலம் உயர்த்தப்படும் இரண்டாவது பெண் நீதிபதி இவராவார். முதலாவது இந்து மல்ஹோத்ரா. தமிழ்நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும் இவரே.
இதையும் படிங்க: "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!
மற்ற நான்கு நீதிபதிகள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றியவர்கள்: ஜஸ்டிஸ் ஷீல் நாகு (பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் ஸ்ரீ சந்திரசேகர் (பம்பாய் உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் சஞ்சீவ் சச்தேவா (மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம்), மற்றும் ஜஸ்டிஸ் அருண் பள்ளி (ஜம்மு & காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றம்). உச்சநீதிமன்றக் கொலீஜியம் மே 27, 2026 அன்று இவர்களைப் பரிந்துரை செய்தது. இந்த நிலையில் 5 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு RELIEF..!! டெட் தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு... சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு..!!